பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையும் சர்ச்சை ஆக்கினார். கடந்த 8ம் தேதி அன்று தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து கங்கனா தனது இன்ஸ்ட்ராகிராமில் "எனக்கும் கொரோனா வந்துவிட்டது. இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. ஊடகங்கள் மக்களை பயமுறுத்தி வருகிறது" குறிப்பிட்டிருந்தார்.
கொடூரமான கொரோனா தொற்றை காய்ச்சல் என்று குறிபிட்டதால் இன்ஸ்ட்ராகிராம் நிறுவன விதிமுறைகளின்படி இந்த பதிவை இன்ஸ்ட்ராகிராம் நீக்கியது.
தற்போது கங்கனா கொரோனாவில் மீண்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: எனக்கு கோவிட் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. இந்தக் கிருமியை நான் எப்படித் தோற்கடித்தேன் என்று சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், கோவிட் ரசிகர் மன்றங்களைப் புண்படுத்த வேண்டாம் என்று என்னிடம் சொல்லப்பட்டுள்ளது. ஆம், இந்தத் தொற்றை அவமதித்தால் அதனால் புண்படுபவர்களும் இங்கே இருக்கின்றனர். எது எப்படியோ, உங்கள் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று எழுதியுள்ளார்.