விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ | காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிஜிட்டல் உரிமை விற்பனை | தி மெட்ராஸ் மிஸ்டரி வெப் தொடரின் முதல் பார்வை | செல்போனை அதிகமாக யூஸ் பண்ணும் ஸ்ருதிஹாசன் | புதிய பட நிறுவனம் தொடங்கி கதையின் நாயகியாக உருவெடுக்கும் சிம்ரன் | மோசமான தோல்வியை சந்தித்த அனுஷ்காவின் காட்டி | கவிதையை ஒரு பாடலாக மாற்றும் கலை நீங்கள்... : ரவி மோகனை வாழ்த்திய பாடகி கெனிஷா | ஹீரோவாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் | காக்கா முட்டை, சைவம், அநீதி, விசாரணை படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை : ஜிவி பிரகாஷ் | கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள் : காணிக்கை வழங்கிய இளையராஜா |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சினிமா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
கடந்த வருட கொரோனா அலை ஏற்பட்ட போது பல திரையுலகப் பிரபலங்கள் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்காக ஹிந்தி நடிகர் சல்மான் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.
இது குறித்து இந்திய மேற்கு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் திவாரி கூறுகையில், “சினிமா தொழிலாளர்கள் பலரது பெயரை சல்மான் கானிடம் வழங்கியுள்ளோம். சல்மான் கான் 25,000 தொழிலளார்களுக்கு தலா 1500 ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் 35 ஆயிரம் மூத்த தொழிலளார்கள் பெயர்ப் பட்டியலை அளித்துள்ளோம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாத உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்க அவர்கள் சம்மதித்துள்ளார்கள். தொழிலளார்களின் வங்கிக் கணக்குகளை உறுதி செய்தபின் நேரடியாக அவர்களது கணக்கிலேயே பணத்தை செலுத்திவிடுவார்கள்,” என அவர் தெரிவித்துள்ளார்.