சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது தர்மா புரொடக்சன்ஸ் சார்பில் படங்களை தயாரித்தும் மற்ற படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறார். குறிப்பாக லைகா நிறுவனத்துடன் இணைந்து பயணிக்க விரும்பிய கரண் ஜோஹர், லைகா தயாரித்த 2.0 படத்தை இந்தியில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது லைகாவிடம் இருந்து ஒதுங்கி, ஜியோ நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து கொண்டுள்ளார் கரண் ஜோஹர். இதனால் லைகா நிறுவனம் டென்சன் ஆனதாக தெரிகிறது.
தற்போது அக்சய் குமார் நடித்து வரும் ராம் சேது படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக லைகா நிறுவனம், தன்னை இணைத்துக் கொன்டதே கரண் ஜோஹர் சொல்லித்தானாம். ஆனால் அவர் தங்களிடமிருந்து விலகியதால், தற்போது ராம்சேது பட மெயின் தயாரிப்பளருக்கு பணம் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறதாம் லைகா. இதனால் அக்சய் குமாருக்கு கொடுக்கப்பட்ட 30 கோடி ரூபாய் செக் ஒன்று, வங்கியிலிருந்து பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.. ஆனால் அக்சய் குமார் தரப்பிலோ, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என மறுக்கிறார்களாம்.