நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகை ஆலியா பட், முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஆலியா பட் தற்போது 'கங்குபாய் கத்தியவாடி', 'டக்த்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்தில் அறிமுகமாக உள்ளார்.
காதல் ஜோடிகளான ரன்பீர், ஆலியா முதல் முறையாக 'பிரம்மாஸ்த்ரா' படத்தில் இணைந்து நடிக்கின்றார்கள். இப்படத்தில் அமிதாப், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த வருடமே இந்த காதல் ஜோடி திருமணம் செய்யத் திட்டமிட்டதாம். ஆனால், கொரோனா தாக்கத்தால் திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த மாதம் ஆலியா பட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதற்கு முன்னதாக ரன்பீர் கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இருவரும் உடல் நலம் தேறி அவர்களது சோதனை நெகட்டிவ் என வந்ததால் சில நாட்கள் மும்பையில் ஓய்வெடுத்த பிறகு தற்போது மாலத்தீவில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளனர்.