'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் |
ஷாருக்கான், சல்மான்கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே நடிக்கும் படம் பதான். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். கடந்த ஆண்டே முடிந்திருக்க வேண்டிய இந்த படத்தின் பணிகள் கொரோனா கால ஊரடங்கின் காரணமாக முடியவில்லை.
கொரோனா தளர்வுகளுக்கு பிறகு சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. மும்பையில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் அரசு விதிமுறைகளின்படி படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஷாருக்கான் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் பதான் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.