நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
'உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பெயர்களை அறிவிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது' என ஆஸ்திரேலிய நிருபர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோரின் பெயர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும் பிரபல பாப் நடிகருமான நிக் ஜோனஸ் ஆகியோர் இந்த பெயர்களை அறிவித்தனர்.
'இவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை வெளியிடும் அளவுக்கு திரையுலகுக்கு இவர்கள் என்ன பங்களிப்பு அளித்துள்ளனர்' என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு 'இதோ நீங்கள் கேட்ட தகுதி. கடந்த 20 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்துள்ளேன். அதைத் தவிர ஹாலிவுட்டிலும் நடித்துள்ளேன். அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பே வாட்ச்' என்ற 'டிவி' தொடரிலும் நடித்துள்ளேன்; இது போதுமா' என பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார். இதையடுத்து நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் தன் தனிப்பட்ட விபர குறிப்புகளை மறைத்துள்ளார். தகுந்த பதில் அளித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.