பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கொரோனா தொற்றுக்கு இதுவரை பல பாலிவுட் நடிகர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இறந்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரன்பீர் கபூருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ரன்பீருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ரன்பீர் கபூரின் தாயும், நடிகையுமான நீது கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது. உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
இதேபோல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.