‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு | என் இதயம் நொறுங்கிவிட்டது : நாய்களுக்காக கண்ணீர் விட்டு கதறிய நடிகை சதா |
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில், ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் தேர்வான திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை, நடிகை பிரியங்கா சோப்ரா, தன் கணவர் நிக் ஜோனஸ் உடன், இணைந்து வெளியிட உள்ளார்.
சர்வதேச திரைப்பட விருதுகளில், மிகச் சிறந்ததாக, ஆஸ்கர் கருதப்படுகிறது. 93வது ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு, 23 பிரிவுகளில், இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பு, வரும், 15ம் தேதி, ஆஸ்கர் வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா, தன் கணவரும், அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸ் உடன் இணைந்து, டிக்டாக் வலைதளத்தில் ஒரு, வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ஆஸ்கர் விருது இறுதிப் போட்டிக்கு தேர்வான திரைப்படங்களை, கணவருடன் இணைந்து அறிவிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பு பெருமை அளிப்பதாக, டுவிட்டர் வலைதளத்திலும், பிரியங்கா குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனா காரணமாக, ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்., 28லிருந்து, ஏப்., 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.