கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. அவரது கல்லீரல் 70 சதவீதம் செயல் இழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று ஓரளவிற்கு குணமடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்தும் மீண்டார்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மே டே, பிரம்மாஸ்த்ரா படங்களில் நடித்து வருகிறார். பிரபாசுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் அமிதாப்பச்சன் தீடீரென மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கல்லீரல் பிரச்சினை மீண்டும் வந்திருப்பதாகவும், இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் "மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, எழுத இயலவில்லை என்று பதிவிட்டுள்ளார். இது அமிதாப் பச்சனின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.