பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் | கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. அவரது கல்லீரல் 70 சதவீதம் செயல் இழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று ஓரளவிற்கு குணமடைந்தார். சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்தும் மீண்டார்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். மே டே, பிரம்மாஸ்த்ரா படங்களில் நடித்து வருகிறார். பிரபாசுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் அமிதாப்பச்சன் தீடீரென மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு கல்லீரல் பிரச்சினை மீண்டும் வந்திருப்பதாகவும், இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமிதாப் தனது டுவிட்டரில் "மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, எழுத இயலவில்லை என்று பதிவிட்டுள்ளார். இது அமிதாப் பச்சனின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.