ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், நடிகர் ஹிரித்திக் ரோஷனும் ஒரு காலத்தில் நெருங்கி பழகியதுடன், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் கங்கனாவே கூறியுள்ளார். ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இதற்கிடையே தன்னை பின்தொடரும் மர்மநபர் யாரோ, தனது இ-மெயிலில் இருந்து யாரோ ஆள்மாறாட்டம் செய்து கங்கனாவுடன் தான் தொடர்பில் இருந்தது போல செய்தி அனுப்பியதாக 2016ல் போலீஸில் புகார் அளித்தார் ஹிரித்திக் ரோஷன்..
ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறியதால், இந்த வழக்கு தற்போது மும்பை போலீஸில் இருந்து க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன் தினம், மும்பை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள க்ரைம் பிரஞ்ச் அலுவலக பிரிவுக்கு வந்த ஹ்ரித்திக் ரோஷன், இந்த புகார் குறித்த தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.