50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
கொரோனா காலத்திற்கு பிறகு தியேட்டர் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டருக்கு வரத் தயங்கினார்கள். அந்த நிலையை மாற்றியது விஜய்யின் மாஸ்டர். படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த விஜய், இதற்காக முதல்வரையும் சந்தித்தார். திட்டமிட்டபடி படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலையும் கொடுத்துள்ளது.
இதே போன்றுதான் பாலிவுட்டிலும் பிரச்சினை நிலவுகிறது. மக்கள் தியேட்டருக்கு வர ஆர்வம் காட்டாத நிலையில் பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களை தியேட்டரில் வெளியிட தயக்கம் காட்டி வருகிறார்கள். ஆனால் மாஸ்டர் தந்த உற்சாகத்தில் சல்மான்கான் தான் நடித்து வரும் ராதே படம் தியேட்டரில் தான் வெளிவரும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்தனை திரையரங்க உரிமையாளர்களுக்கும் பதில் சொல்ல நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்கு மன்னிக்கவும். இந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய முடிவு. திரையரங்க உரிமையாளர்கள் என்ன மாதிரியான நிதிப் பிரச்சினைகளில் இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ராதே படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலமாக அவர்களுக்கு உதவ நினைக்கிறேன்.
அதற்குக் கைமாறாக, ராதே படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் மீது உச்சபட்ச அக்கறையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். படம் 2021 ஈகைத் திருநாள் அன்று (மே 14) வெளியாகும். ராதே படத்தை இந்த வருடம் ஈகைத் திருநாள் அன்று திரையரங்குகளில் பார்த்து ரசியுங்கள். நம்பிக்கையுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ராதே படத்தை பிரபுதேவா இயக்கி உள்ளார். மேகா ஆகாஷ், திஷா படானி, பரத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வெடரன் என்கிற தென் கொரியத் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் இது. இந்தப் படம் கடந்த வருடம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் அக்டோபர் மாதத்தில்தான் படப்பிடிப்பு முடிந்தது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.