‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழின் முன்னணி இயக்குனரான அட்லி, ஹிந்திக்குச் சென்று ஷாரூக்கான் ஹீரோவாக நடித்த 'ஜவான்' படத்தை இயக்கினார். அந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.
அந்தப் படத்திற்குப் பின்பு, சல்மான் கான் நடிக்க உள்ள படத்தை அட்லி இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனிடமும் பேச்சு வார்த்தை நடந்ததாகச் சொன்னார்கள். ஆனால், அப்படம் 'டேக் ஆப்' ஆகாமல் அப்படியே முடங்கிவிட்டது. அதன்பின் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க அட்லி இயக்க ஒரு படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் 'சிக்கந்தர்' படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசுகையில், “அட்லி ஒரு பெரிய பட்ஜெட் ஆக்ஷன் கதையை எழுதினார். பட்ஜெட்டின் காரணமாக படம் இப்போது தாமதம் ஆகியுள்ளது. படத்தில் இருக்கும் மற்ற நடிகர், நடிகையர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பெரிய கூட்டணிகள் நடக்க சரியான கதை தேவை. இப்போது நான் எனது அடுத்த படத்திற்குச் சென்றுவிட்டேன்,” என்று கூறியுள்ளார்.
அட்லி, அல்லு அர்ஜுன் படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.