விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் ஒரு நடிகையாகவும், அதிக சொத்துக்களை உடையவராகவும் இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் நடிகரும், பாடகருமான நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானவர் பிரியங்கா.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒடிஷா மாநிலத்தில் உள்ள கோராபுட் என்ற இடத்தில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு முன்பாக அமெரிக்கா செல்வதற்காக விசாகப்பட்டினம் விமானநிலையத்திற்கு கார் ஓட்டிச் சென்றுள்ளார் பிரியங்கா. அப்போது 'கொய்யா' விற்ற பெண் ஒருவர் தன்னை ஊக்கப்படுத்தியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா.
அதில், “இன்று நான் மிகவும் ஊக்கப்படுத்தப்பட்டேன். மும்பை வழியாக அமெரிக்கா செல்ல விசாகப்பட்டினம் விமான நிலையம் வரை கார் ஓட்டிக் கொண்டு சென்றேன். வழியில் ஒரு பெண் கொய்யா விற்றதைப் பார்த்தேன். எனக்கு அது மிகவும் பிடிக்கும். அந்தப் பெண்ணிடம் என்ன விலை என்று கேட்டேன் 150 ரூபாய் என்றார். நான் அவரிடம் 200 ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவருடைய வாழ்க்கையை நடத்துவதற்கு அவர் கொய்யா விற்கிறார். நான் பணம் கொடுத்ததும் அவர் போய்விட்டார். இருந்தாலும் சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறுவதற்குள் அவர் என்னிடம் திரும்பவும் வந்து மேலும் இரண்டு கொய்யாக்களைக் கொடுத்தார். வேலை செய்யும் பெண், அவர் தர்மத்தை விரும்பவில்லை,” என்று பேசியுள்ளார்.




