என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

1984ல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மாதுரி தீக்சித், 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பத்மபூஷன் விருதை பெற்றுள்ள இவர், 1999ல் மருத்துவர் ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். கடைசியாக 'பூல் புலையா 3' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 57 வயதிலும் இணையத்தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மாதுரி தீக்சித் பேசியதாவது: பெண்கள் காலத்துக்கும் தங்களை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்களுக்கு சமமானவர்கள் பெண்கள் என பார்வையாளர்களை எங்களாலும் ஈர்க்க முடியுமென ஒவ்வொரு முறையும் நிரூபிக்க வேண்டியுள்ளது. உண்மையில் சினிமா துறையில் பாலின பாகுபாடு உள்ளது. குழந்தை அடியெடுத்து வைப்பதுபோல ஒவ்வொன்றாக பொறுமையாக எடுத்து வைத்து முன்னேறுகிறோம்.
பாகுபாடு நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதை நோக்கிதான் தினமும் வேலை செய்து வருகிறோம். சம்பளத்தில் கூட பாகுபாடு உள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பெண்களிடம் வந்து சேர்வதை ஆச்சரியமாகப் பார்க்கிறேன். இதற்கு நடிகர்கள்தான் பதிலளிக்க வேண்டுமென நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.