இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் |

பாலிவுட்டின் நம்பர் ஒன் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் மும்பையில் மன்னாட்டில் ஒரு பிரமாண்டமான பங்களாவில் வசித்து வருகிறார். கிட்டத்தட்ட 2446 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள நிலத்தில் அவர் ஆடம்பரமான வீடு கட்டியுள்ளார். அதே சமயம் அந்த நிலத்தை வேறு ஒருவரிடம் இருந்து தன்னுடைய மற்றும் தனது மனைவியின் பெயரில் 99 வருட குத்தகையாக 2001ல் அவர் பெற்றிருந்தார். கடந்த 2019ல் அதன் ஓனர்ஷிப் மாற்றுவதற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையாக அதன் மதிப்பில் 25 சதவீதம் தொகையை அதாவது 27.5 கோடி ரூபாயை அரசுக்கு வரியாக செலுத்தி இருந்தார்.
ஆனால் பின்னர் அவர் வரி கணக்கை சரிபார்த்த போது தன்னிடம் கூடுதலாக வசூலித்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து கலெக்டர் அலுவலகம் வழியாக மஹாராஷ்டிரா அரசுக்கு தகவல் தெரிவித்தார் ஷாருக்கான். அதனை ஆய்வு செய்த மும்பை அரசு ஷாருக்கான் 9 கோடி ரூபாய் கூடுதலாக செலுத்தி இருப்பதை கண்டுபிடித்துள்ளதுடன் விரைவில் அந்த தொகை ஷாருக்கானுக்கு திருப்பி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.