பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்., 9) இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
டாடா குழுமம் பல்வேறு தொழில்களில் களமிறங்கி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா. இவர் பல்வேறு தொழில்களில் சாதித்தாலும் சினிமா பக்கம் ஆர்வம் காட்டவில்லை. சினிமா பார்க்க தனக்கு நேரமில்லை என்று முன்பு கூறியுள்ள இவர் பாலிவுட்டில் ஒரே ஒரு படம் மட்டும் தயாரித்துள்ளார்.
2004ல் விஜய் பட் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம் மற்றும் பிபாசா பாசு நடிப்பில் வெளியான படம் ‛ஆட்பார்'. இந்த படத்தை ரத்தன் டாடா தான் இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்தார். அன்றைய காலக்கட்டத்தில் ரூ.9 கோடி செலவில் தயாரான படம் தோல்வியை தழுவியது. இதனால் தான் என்னவோ அதன்பின் இவர் படங்களே தயாரிக்கவில்லை. ரத்தன் டாடா கால்பதித்து சறுக்கிய ஒரே தொழில் சினிமா என்று கூட சொல்லலாம்.