சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(அக்., 9) இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும், முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
டாடா குழுமம் பல்வேறு தொழில்களில் களமிறங்கி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா. இவர் பல்வேறு தொழில்களில் சாதித்தாலும் சினிமா பக்கம் ஆர்வம் காட்டவில்லை. சினிமா பார்க்க தனக்கு நேரமில்லை என்று முன்பு கூறியுள்ள இவர் பாலிவுட்டில் ஒரே ஒரு படம் மட்டும் தயாரித்துள்ளார்.
2004ல் விஜய் பட் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம் மற்றும் பிபாசா பாசு நடிப்பில் வெளியான படம் ‛ஆட்பார்'. இந்த படத்தை ரத்தன் டாடா தான் இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்தார். அன்றைய காலக்கட்டத்தில் ரூ.9 கோடி செலவில் தயாரான படம் தோல்வியை தழுவியது. இதனால் தான் என்னவோ அதன்பின் இவர் படங்களே தயாரிக்கவில்லை. ரத்தன் டாடா கால்பதித்து சறுக்கிய ஒரே தொழில் சினிமா என்று கூட சொல்லலாம்.