Advertisement

சிறப்புச்செய்திகள்

16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் பட வில்லன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பூத் பங்களாவுக்காக 14 வருடம் கழித்து பிரியதர்ஷனுடன் இணையும் அக்ஷய் குமார்

10 செப், 2024 - 01:36 IST
எழுத்தின் அளவு:
Akshay-Kumar-announces-Bhoot-Bangla-on-his-birthday,-collaborates-with-Priyadarshan-after-14-years

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தையும் தாண்டி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக ஹிந்தியிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதுவரை ஹிந்தியில் 27 படங்களை இயக்கியுள்ள அவர், கடந்த 2021ல் ஹங்கமா-2 என்கிற படத்தை இயக்கியிருந்தார்.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ஹிந்தியில் நுழையும் அவர் மீண்டும் அக்ஷய் குமார் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அக்ஷய் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பூத் பங்களா' என டைட்டில் வைக்கப்பட்டு இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 வருடங்கள் கழித்து இயக்குனர் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிப்பதற்கு தான் ஆவலாக இருப்பதாக அக்ஷய் குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே 'பாஹம் பாக் ஹேரா பெரி, கரம் மசாலா' என பிரியதர்ஷனுடன் இணைந்து ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அக்ஷய் குமார், கடந்த 2010ல் அவரது இயக்கத்தில் 'கட்டா மீத்தா' என்கிற படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போதைய இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த பூத் பங்களா திரைப்படம் ஒரு ஹாரர் பேண்டஸி திரில்லராக உருவாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'எமர்ஜென்சி' படத்தால் நிதி நெருக்கடி :  மும்பை பங்களாவை  32 கோடிக்கு விற்றார் கங்கனா'எமர்ஜென்சி' படத்தால் நிதி ... ஆர்ஆர்ஆர்-ல் உருவான நட்பை தேவராவிலும் தொடரும் ஆலியா பட் ஆர்ஆர்ஆர்-ல் உருவான நட்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)