'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் தற்போது இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதி பாஜக எம்பி.,யாக இருக்கிறார். இவர், இயக்கி, நடித்துள்ள 'எமர்ஜென்சி' படம் செப்.6-ல் வெளியாக இருக்கிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பலத்த எதிர்ப்பு, சீக்கிய அமைப்புகளின் மிரட்டல், தணிக்கை சான்று பெறுவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் படம் வெளியிடுவது தாமதமாகி வருகிறது. இந்தப் படத்தை தனது முழு சொத்தையும் விற்று எடுத்திருப்பதாக பல நேர்காணல்களில் கங்கனா கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவர், மும்பை பாந்த்ரா அருகில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் இரண்டு மாடிகளைக் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை 32 கோடிக்கு விற்பனை செய்து உள்ளார். இதனை கோவையை சேர்ந்த தொழிலதிபர் சுவேதா என்பவர் வாங்கியுள்ளார். மொத்தம் 3,075 சதுர அடி கொண்ட இந்த பங்களாவில் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர், ஜிம் வசதிகள் உள்ளன. இந்த பங்களாவை 6 வருடத்திற்கு முன்பு 20 கோடிக்கு வாங்கிய கங்கனா தற்போது 12 கோடி ரூபாய் லாபத்தில் விற்று உள்ளார்.
இந்த பங்களாவை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி இன்றி கட்டியிருப்பதாக முன்பகுதியை இடித்தார்கள். இதற்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் கங்கனா. இந்த வழக்கில் கங்கனாவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.