'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
ஹிந்தி மற்றும் போஜ்புரி மொழிகளில் புகழ்பெற்ற நடிகர் ரவி கிஷன். தமிழில் டி.ராஜேந்தர் இயக்கிய ‛மோனிஷா என் மோனலிசா' படத்தில் நடித்துள்ள இவர், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‛சங்கத்தமிழன்' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபர்ணா சோனி என்பவர் நானும் நடிகர் ரவி கிஷனும் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்ததாகவும் தனது மகள் சினோவா சோனிக்கு, ரவிகிஷன் தான் தந்தை என்றும் கூறி லக்னோ நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ஆனால் இதை எதிர்த்து ரவி கிஷனின் மனைவி பிரீத்தி சுக்லா, அபர்ணா சோனி தன்னிடம் 20 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து அபர்ணா சோனி, அவரது மகள் சினோவா சோனி மற்றும் கணவர் ராஜேஷ் சோனி ஆகியோர் மீது எப் ஐ ஆர் போடப்பட்டது.
இந்த நிலையில் இந்த புதிய வழக்கால் தனக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து ரவி கிஷன் மீது தான் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்றும் அதற்கு பதிலாக ரவி கிஷனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தங்கள் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர்-ஐ நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் புதிய கோரிக்கை மனு அளித்துள்ளார் அபர்ணா சோனி. இதன் அடிப்படையில் நீதிமன்றம் அவரது வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதே சமயம் ரவி கிஷனின் மனைவி, தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வாரா என்பது பற்றி இன்னும் எந்த தகவலும் தெரியவில்லை.