துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தனது சொந்த தொகுதியான இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் தானே தயாரித்து, நடித்து முடித்துள்ள 'எமெர்ஜன்சி' படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்க போட இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
திரையுலகம் என்பது பொய், அங்குள்ள அனைத்தும் போலி. திரையுலகினர் யதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறார்கள். பார்வையாளர்களைக் கவரும் ஒரு போலியான பளபளப்பான உலகம் அது. கட்டாயத்தாலேயே நான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும்போது நான் கதை எழுதத் தொடங்கினேன். படம் இயக்குவது, தயாரிப்பது என என்னை பிசியாக வைத்துக் கொண்டேன். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் எனது நேரம் முழுவதையும் மக்களுக்காக செலவிடுவேன். கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்றார்.
கங்கனாவும் வெற்றி பெற்று மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால் கங்கனா மத்திய அமைச்சராவது உறுதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.