‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தனது சொந்த தொகுதியான இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் தானே தயாரித்து, நடித்து முடித்துள்ள 'எமெர்ஜன்சி' படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்க போட இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
திரையுலகம் என்பது பொய், அங்குள்ள அனைத்தும் போலி. திரையுலகினர் யதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறார்கள். பார்வையாளர்களைக் கவரும் ஒரு போலியான பளபளப்பான உலகம் அது. கட்டாயத்தாலேயே நான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும்போது நான் கதை எழுதத் தொடங்கினேன். படம் இயக்குவது, தயாரிப்பது என என்னை பிசியாக வைத்துக் கொண்டேன். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் எனது நேரம் முழுவதையும் மக்களுக்காக செலவிடுவேன். கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்றார்.
கங்கனாவும் வெற்றி பெற்று மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால் கங்கனா மத்திய அமைச்சராவது உறுதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.




