துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஷால் கும்பார் இயக்கத்தில் நடிகை அஞ்சலி பாட்டீல், ஸ்ரீனிவாஸ் போக்லே மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஹிந்தி படம் ‛மல்ஹர்'. ரிஷி சக்சேனா, முகமது சமத் மற்றும் அக்ஷதா ஆச்சார்யா ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபுல்லா பசாத் தயாரித்துள்ளார். டி.சதீஷ் மற்றும் சாரங் குல்கர்னி இசையமைத்துள்ளனர்.
ஒரு கிராமத்தில் நடக்கும் மூன்று கதைகளாக ஒவ்வொரு கதையுடனும் ஒரு தொடர்பு இருப்பது போன்று இந்த படம் உருவாகி உள்ளது. காதல் கலந்த குடும்ப படமாக தயாராகி உள்ளது. ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மே 31ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் பிரபுல்லா பசாத் கூறுகையில், ‛‛மல்ஹர் படம் கட்ச் என்ற கிராம பகுதியில் நடக்கும் மூன்று கதைகளின் அற்புதமான சங்கமம் ஆகும். பார்வையாளர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு கிடைக்கும் வகையில் படத்தை சுவாரஸ்யமாக எடுத்துள்ளோம். இந்தப் படம் இரண்டு சிறந்த நண்பர்களின் கதையைச் சொல்கிறது'' என்றார்.