நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
மலையாளத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மின்னல் முரளி என்கிற திரைப்படம் வெளியானது. டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் இணைந்து நடித்த இந்தப்படம் சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது. இயக்குனர் பஷில் ஜோசப் இந்த படத்தை இயக்கி இருந்தார். கிராமத்தில் இருக்கும் ஒரு சாதாரண மனிதர்களுக்கு திடீரென சூப்பர் மேன் பவர் கிடைக்கும்போது அவர்களுக்கு இடையே ஏற்படும் மோதலையும் அதன் விளைவுகளையும் மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இந்த படத்தை படமாக்கி இருந்தார்.
இந்த படத்தை பார்த்துவிட்டு பாலிவுட்டில் இருந்து கூட பலரும் பஷில் ஜோசப்பை பாராட்டினார்கள். இந்த நிலையில் தான் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சக்திமான் என்கிற படத்தை பஷில் ஜோசப் இயக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து மின்னல் முரளியாக நடித்த டொவினோ தாமஸும் ஒரு பேட்டியில் சூசகமாக உறுதி செய்துள்ளார். ஆனாலும் இந்த படம் அடுத்த வருடம் தான் துவங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.