ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படமும், பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த டங்கி திரைப்படமும் வெளியானது. ஒரு பக்கம் சலார் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ஷாரூக்கானின் டங்கி படத்திற்கும் அதற்கு குறையாத எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.
அதே சமயம் இந்த படங்களின் வெளியீட்டின் போது தியேட்டர்களை பங்கிடுவதில் கூட பல இடங்களில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் சலார் படம் வெற்றி பெற்று தற்போது 600 கோடியை தாண்டி வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் ஷாரூக்கானின் டங்கி திரைப்படம் தற்போது தான் 400 கோடியை தொட்டுள்ளது. இந்த நிலையில் டங்கி படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணியிடம் இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியானதால் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குபதிலளித்த ஹிராணி, “நிச்சயமாக வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இப்படி இரண்டு பெரிய படங்கள் ஒன்றாக வெளியாகாமல் தவிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவாகவே இருந்தன. மேலும் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாவதால் இப்படிப்பட்ட மோதல் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாதது.
இந்த சூழ்நிலையில் இரண்டு படங்களையும் பார்க்கலாம் என நினைப்பவர்கள் ஏதோ ஒரு படத்திற்காக மட்டுமே செலவு செய்ய முன்வருவார்கள். குறிப்பாக மாதத்திற்கு ஒரு படம் பார்க்கலாம் என நினைத்திருப்பவர்கள் இதில் ஏதோ ஒன்றைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இந்த இரண்டு படங்களின் வசூலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்” என்று கூறியுள்ளார்.