300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'சலார்'. முதல் பாகம் மட்டுமே வெளியாகி உள்ள இந்த படத்தில் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் வரதராஜ மன்னார் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் பிரபாஸின் நண்பராக நடிகர் பிரித்விராஜ் நடித்திருந்தார். அதே சமயம் இந்த படத்தில் சிறு வயது பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் தெலுங்கு சிறுவனான கார்த்திகேயா என்பவர் நடித்தார். இந்த நிலையில் தற்போது தான் இயக்கியுள்ள 'எம்புரான்' படத்திலும் இவரை அழைத்து நடிக்க வைத்துள்ளார் பிரித்விராஜ். ஆச்சரியமாக இந்த படத்திலும் பிரித்விராஜின் சிறு வயது கதாபாத்திரத்தில் தான் கார்த்திகேயா நடித்துள்ளார்.
சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சியில் கார்த்திகேயாவை எம்புரான் படத்தில் நடிக்க வைத்தது குறித்து பிரித்விராஜ் கூறும்போது, “ஒரு நாள் இரவு இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு போன் செய்து எனக்கு சலார் படத்தின் வீடியோ கிளிப் ஒன்றை அனுப்பி வையுங்கள் என்றேன். அவர் அனுப்பி வைத்த சிறிய வீடியோவில் என்னுடைய இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் கார்த்திகேயாவை பார்த்தேன்.
உடனடியாக பிரசாந்த் நீலுக்கு போன் செய்து இந்த பையனை வைத்து நீங்கள் என்ன எடுக்க முடியுமோ அதை எல்லாம் உடனே எடுத்து விடுங்கள். விரைவில் என்னிடம் இவனை அனுப்பி விடுங்கள். நான் எம்புரான் படத்திலும் இவனை பயன்படுத்த போகிறேன் என்று கூறிவிட்டேன். மிகச் சிறப்பான நடிப்பை கார்த்திகேயா வெளிப்படுத்தியுள்ளான். பின்னாளில் இவன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வராவிட்டால் தான் எனக்கு ஏமாற்றம் ஏற்படும்” என்று கூற அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்திகேயா கண் கலங்கியபடி பிரித்விராஜூக்கு நன்றி தெரிவித்தார்.