தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் |

பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'சலார்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. இதனிடையே, கடந்த சில வாரங்களாக இப்படம் டிராப் செய்யப்பட்டதாகத் தகவல் வந்து கொண்டிருந்தது. பிரசாந்த் நீல், பிரபாஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்றார்கள்.
இந்த செய்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சற்று முன் பிரசாந்த், பிரபாஸ் 'சலார்' படப்பிடிப்புத் தளத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் 'சலார் 2' படப்பிடிப்பு நிச்சயம் ஆரம்பமாகும் என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார்கள். ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டே 'சலார் 2' படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குவார் எனத் தெரிகிறது.