சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'சலார்'. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து தயாராகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. இதனிடையே, கடந்த சில வாரங்களாக இப்படம் டிராப் செய்யப்பட்டதாகத் தகவல் வந்து கொண்டிருந்தது. பிரசாந்த் நீல், பிரபாஸ் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்றார்கள்.
இந்த செய்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சற்று முன் பிரசாந்த், பிரபாஸ் 'சலார்' படப்பிடிப்புத் தளத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “அவர்கள் சிரிப்பதை நிறுத்தவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் 'சலார் 2' படப்பிடிப்பு நிச்சயம் ஆரம்பமாகும் என்பதை மறைமுகமாக அறிவித்துள்ளார்கள். ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டே 'சலார் 2' படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குவார் எனத் தெரிகிறது.