ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
இந்தியத் திரையுலகத்தின் டாப் நடிகரான ஷாரூக்கான் நடிப்பில் 'டங்கி' படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்படம் வெற்றி பெறுவதற்காக ஜம்முவில் கத்ரா என்ற இடத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார் ஷாரூக்கான்.
இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'பதான், ஜவான்' படங்களின் வெளியீட்டிற்கு முன்பாகவும் அந்த கோயிலுக்குச் சென்றார் ஷாரூக்கான். தொடர்ந்து 'டங்கி' வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளார்.
கோயிலில் தன்னால் பக்தர்களுக்குத் தொந்தரவு வரக் கூடாதென தனது முகத்தை மறைத்துக் கொண்டு அவர் சென்றுள்ளார். போலீசார் பாதுகாப்புடன் ஷாரூக் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
ஒரே ஆண்டில் வெளியாகும் ஷாரூக்கின் மூன்றாவது படம் 'டங்கி'. முந்தைய இரண்டு படங்களைப் போலவே இந்தப் படமும் 1000 கோடியை வசூலிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.