துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சல்மான் கான், கத்ரினா கைப், இம்ரான் ஹாஸ்மி மற்றும் பலர் நடித்த 'டைகர் 3' ஹிந்திப் படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ம் தேதி வெளியானது. மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் என்ற இடத்தில் உள்ள மோகன் சினிமா என்ற தியேட்டரில் அப்படத்தைப் பார்க்க வந்த ரசிகர்கள் தியேட்டரின் உள்ளே பட்டாசுகளை வெடித்தும், ராக்கெட்டுகளை விட்டும் அதிர்ச்சியூட்டினார்கள். தியேட்டர் முழுவதும் தாறுமாறாக வெடிகள் வெடித்ததால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் சிதறி ஓடினார்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
அது குறித்து காவல் துறை விசாரணையில் இறங்கி வழக்குப் பதிவு செய்தது. சவானி காவல் நிலையத்தில் 112 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து சல்மான் கான், “டைகர் 3' படத்தின் போது தியேட்டருக்குள் பட்டாசு வெடித்ததைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இது ஆபத்தானது, நம்மையும் பிறரையும் பணயம் வைக்காமல் படத்தை ரசிப்போம், பத்திரமாக இருங்கள்,” என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் 'லியோ' படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது விஜய் ரசிகர்கள் ரோகிணி திரையரங்கின் மொத்த இருக்கைகளையும் சேதப்படுத்தினார்கள். சில நாட்கள் தியேட்டர் மூடப்பட்டது. ஆனால், அது குறித்து எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.