இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி |
சல்மான்கான், கத்ரினா கைப் நடித்த 'டைகர் 3' படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இதனால் சல்மான் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள். இதன் உச்சபட்சமாக மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற ஊரில் படம் தொடங்கியதும் தியேட்டருக்குள் சரமாரியாக பட்டாசை கொழுத்தினார்கள்.
இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்கள். பெண்கள் உள்ளிட்ட சிலர் கீழே விழுந்து காயம் அடைந்தார்கள். தியேட்டர் முழுவதும் புகை மூட்டத்தால் சிலருக்கு மூச்சு திணறியது. இதனால் அந்த காட்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து சல்மான்கான் தனது டுவிட்டரில் வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதில், “தியேட்டருக்குள் பட்டாசு வெடிப்பது ஆபத்தானது. நமக்கும், பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாமல் படத்தை பார்த்து ரசியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருக்கிறார்.