எம்புரான், பஷூக்கா : தொடர்ந்து ஆக்ஷன் மோடுக்கு தயாராகும் மலையாளம் | இன்ஸ்டா பிரபலத்தை பிரபாஸின் ஜோடியாக்கியது ஏன்? : இயக்குனர் விளக்கம் | மீண்டும் ஒரு புரமோஷன் சர்ச்சை : இந்த முறை பெண் இயக்குனருக்கும் நடிகைக்கும் | பாவனா நடித்துள்ள ‛தி டோர்' படத்தின் டீசர் வெளியானது | அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் |
தேசிய விருது பெற்ற 'மணிகர்னிகா' படத்திற்கு பிறகு கங்கனா ரணவத்தின் படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படவில்லை. வசூலையும் தரவில்லை. அதிலும் அவர் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களான டாக்கெட், தலைவி, சந்திரமுகி 2, தற்போது வெளியாகி உள்ள தேஜஸ் படங்கள் போதிய வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. குறிப்பாக 'தேஜஸ்' படம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. போதிய கூட்டம் இன்றி பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படம் வெளியான 4 நாட்களில் வெறும் 5 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 60 கோடியில் தயாராகி உள்ள இந்த படம் அந்த பட்ஜெட்டை மீட்காது என்று சினிமா பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் கங்கனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் நாங்கள் வாழ முடியாது” என்று கூறினார்.