'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். சாவாரியா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தனுஷ் நடித்த ராஞ்ஜனா என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். தற்போது பிளைண்ட் என்ற படத்தில் நடித்து வரும் சோனம் கபூர், தனது 13 வயதில் நடைபெற்ற பாலியல் சீண்டல் குறித்து பேசிய ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில், தனக்கு 13 வயதாக இருக்கும்போது மும்பையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நண்பர்களுடன் திரைப்படப் பார்க்க சென்றிருந்தபோது, இடைவெளியில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்கு சென்ற நேரத்தில் கூட்ட நெரிசலில் யாரோ நபர் தன்னுடைய மார்பகங்களை சீண்டியதாகவும் இதனால் தான் பயத்தில் அழுது விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த விஷயத்தை தான் யாரிடத்திலும் சொல்லாமல் இருந்த நிலையில் தானே தவறு செய்து கொண்ட மனநிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சோனம் கபூர். மேலும், ஒவ்வொரு பெண் குழந்தைகளும் தங்களது பருவ வயதில் ஒருவித பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். தாங்கள் குற்றம் செய்தது போன்ற உணர்வுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.