புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
பாலிவுட் நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். சாவாரியா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தனுஷ் நடித்த ராஞ்ஜனா என்ற படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். தற்போது பிளைண்ட் என்ற படத்தில் நடித்து வரும் சோனம் கபூர், தனது 13 வயதில் நடைபெற்ற பாலியல் சீண்டல் குறித்து பேசிய ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில், தனக்கு 13 வயதாக இருக்கும்போது மும்பையில் உள்ள ஒரு தியேட்டருக்கு நண்பர்களுடன் திரைப்படப் பார்க்க சென்றிருந்தபோது, இடைவெளியில் ஸ்நாக்ஸ் வாங்குவதற்கு சென்ற நேரத்தில் கூட்ட நெரிசலில் யாரோ நபர் தன்னுடைய மார்பகங்களை சீண்டியதாகவும் இதனால் தான் பயத்தில் அழுது விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு இந்த விஷயத்தை தான் யாரிடத்திலும் சொல்லாமல் இருந்த நிலையில் தானே தவறு செய்து கொண்ட மனநிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் சோனம் கபூர். மேலும், ஒவ்வொரு பெண் குழந்தைகளும் தங்களது பருவ வயதில் ஒருவித பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். தாங்கள் குற்றம் செய்தது போன்ற உணர்வுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.