மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் படம், 'ஜவான்'. நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார் வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று இந்த படம் வெளியாகிறது.
சமீபத்தில் பிரியாமணி அளித்த பேட்டி ஒன்றில் ஷாருக்கானுடன் இரண்டாவது முறையாக நடிக்கும் அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்; “இதற்கு முன் அவர் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தேன். அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், அவர் என்னை ஞாபகம் வைத்திருப்பாரா என்ற யோசனையில் இருந்தேன். அப்போது முதல் நாள் படப்பிடிப்பில் என்னைப் பார்த்ததும் வழக்கம்போல கட்டியணைத்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார். தினமும் பல பிரபலங்களை ரசிகர்களை சந்திக்கும் அவர் ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடிய என்னை ஞாபகம் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று இவ்வாறு கூறினார்.