நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
பாலிவுட் நடிகரான ஷாருக்கானுக்கு இந்திய அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி பக்கத்து நாடான பாகிஸ்தானிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்ல அவருடன் நடிப்பதற்காக அந்த நாட்டு நடிகர், நடிகைகளும் ஆர்வமாக இருக்கின்றனர். அந்தவகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடன இயக்குனர் பரா கான், ஷாருக்கானை வைத்து இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்கிற படத்தில் ஷாருக்கானின் தந்தையாக நடித்தவர் பாகிஸ்தான் நடிகர் ஜாவேத் ஷேக்.
இந்த படத்தில் நடிப்பதற்காக அவரிடம் சம்பளம் பேசப்பட்டபோது தனக்கு வெறும் ஒரு ரூபாய் மட்டும் சம்பளமாக கொடுத்தால் போதும் என்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடிப்பதே தனக்கு மிகப்பெரிய பெருமை என்றும் கூறினாராம்.
இந்த தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்ட ஜாவேத் ஷேக், ‛‛தான் அப்படி கூறினாலும் அவர்களாகவே ஒரு தொகையை எனது சம்பளமாக நிர்ணயித்து, அதில் எனக்கு முதல் கட்டமாக ஒரு காசோலை கொடுத்தார்கள். அந்தத்தொகையைப் பார்த்தே நான் பிரமித்துப் போனேன்” என்று கூறியுள்ளார்.