லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மேற்கு வங்க இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'. அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு விரேஷ் ஸ்ரீவல்சா மற்றும் பிஷக் ஜோதி ஆகிய இருவர் இசையமைத்திருந்தனர்.
இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன. படத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றங்கள் படத்தை தடை செய்ய மறுத்து விட்டது.
தமிழகத்தில் இந்தப்படம் திரையிடப்பட்டு புக்கிங் எல்லாம் நடைபெற்ற நிலையில் படம் வெளியாகாது என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். படத்தை தமிழக அரசு நேரடியாக தடை செய்யாவிட்டாலும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களாக படத்தை திரையிட மறுத்ததாக காட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில அரசு படத்தை தடை செய்துள்ளது. இது தொடர்பாக அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது “வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களைத் தவிர்த்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளோம்.” என்றார்.