எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான அனில் கபூர், 'பொன்னியின் செல்வன் 2' படத்தைப் பார்த்து மனம் திறந்து பாராட்டியுள்ளார். மும்பையில் படத்தைப் பார்த்த பின் இயக்குனர் மணிரத்னம், அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் ஆகியோரை சந்தித்துப் பேசிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். ஹிந்தியில் இப்படத்திற்காக ஆரம்ப அறிமுகக் காட்சிக்கான பின்னணிக் குரலை அனில் கபூர் தான் கொடுத்திருந்தார்.
“மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 2' பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவம். பிடிப்பான நாடகம், மயக்கும் இசை, காவியமான படைப்பு ஆகியவை ஆரம்பத்திலிருந்தே என்னைக் கவர்ந்தன. மிகச் சிறப்பாக நடித்த விக்ரமிற்கு சத்தம் போட்டு ஒரு பாராட்டு, வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயின் அற்புதமான நடிப்பு.
ஏஆர் ரஹ்மானின் இசை படத்தை காவிய அளவிற்கு தூக்கியுள்ளது. எனது நண்பன் ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் ஹைலைட். ஆடை அலங்காரத்தில் ஏகலகானி அசத்தியுள்ளார். 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் நானும் சிறு பங்காக இருப்பது எனக்குப் பெருமையும், மரியாதையும். ஒரு நிஜமான மாணிக்கத்தைத் தந்த மணிரத்னம் மற்றும் மொத்த குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்குனராக அறிமுகமான 'பல்லவி அனு பல்லவி' கன்னடப் படத்தின் கதாநாயகன் அனில் கபூர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.