வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருந்த தர்மேந்திரா, நடிகையாக இருந்த ஹேமமாலினி ஆகியோர் இன்று தங்களது 43வது திருமண நாளைக் கொண்டாடி உள்ளனர். அது பற்றிய தகவலைப் பகிர்ந்து தனது கணவர் தர்மேந்திராவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ஹேமமாலினி.
தமிழகத்தைச் சேர்ந்த ஹேமமாலினி, தமிழ்ப் படங்களில் நடிக்க முயன்று ஓரிரு படங்களில் மட்டும் முக்கியத்துவமில்லாத கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பின் ஹிந்தியில் ராஜ்கபூரின் 'சப்னோ கா சௌதாகர்' படம் மூலம் 1968ம் ஆண்டு அறிமுகமானார். அதன்பின் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்தார் ஹேமமாலினி.
1970ல் தர்மேந்திரா ஜோடியாக 'தும் ஹசின் மெய்ன் ஜவான்' என்ற படத்தில் முதல் முறையாக நடித்தார். ஏற்கெனவே திருமணமாகி இரண்டு மகன்கள், இரண்டு மகள்களுடன் இருந்த தர்மேந்திராவை 1980ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ஹேமமாலினி. அவர்களுக்கு இஷா தியோல், அஹானா தியோல் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கிய 'ஆய்த எழுத்து' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்தவர் இஷா தியோல்.
இன்று திருமண நாளைக் கொண்டாடும் ஹேமமாலினி, தர்மேந்திரா தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.