''தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு தயாராக இருக்கணும்'': கமல்ஹாசன் பேச்சு | ''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி |
பாலிவுட் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் பேட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நவாசுதீன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இப்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் நடித்த குளிர்பான விளம்பரம் ஒன்று சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்த விளம்பரத்தில் பெங்காலி மக்களை சோம்பேறிகள் என்று சித்தரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இது பெங்காலி மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று திவ்யான் முகர்ஜி என்பவர் கோல்கட்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெங்காலி சமூக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் திட்டமிட்டு எந்த கருத்தையும் இடம்பெற செய்யவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளது.