ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாலிவுட் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் பேட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நவாசுதீன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இப்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் நடித்த குளிர்பான விளம்பரம் ஒன்று சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்த விளம்பரத்தில் பெங்காலி மக்களை சோம்பேறிகள் என்று சித்தரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இது பெங்காலி மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று திவ்யான் முகர்ஜி என்பவர் கோல்கட்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெங்காலி சமூக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் திட்டமிட்டு எந்த கருத்தையும் இடம்பெற செய்யவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளது.