‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
பிரபல பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. 'காமசூத்ரா' படத்தில் நடித்து புகழ்பெற்றவர். ரெட் ஸ்லஸ்திக், டைம் பாஸ், ரகூப் உள்பட ஏராளமான படங்களில் நடித்த்திருக்கிறார். தமிழில் 'யுனிவர்சிட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது பட வாய்ப்புகள் இன்றி இருக்கும் ஷெர்லின் சோப்ரா தொழில் அதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று மும்பை போலீசில் புகார் செய்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், “என்னை மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் சுனில் லோதா ஒரு ஓட்டலில் என்னை சந்தித்து அவர் எடுக்கும் பாடல் ஆல்பத்தில் நடிக்க கேட்டார். நான் சம்மதித்தேன். எனது மேலாளரிடம் அட்வான்ஸ் தொகை கொடுத்தார்.
பின்னர் எனது வீட்டுக்கே வந்துவிட்டார். வீட்டில் சாப்பாடு வரவழைத்து சாப்பிட்டார். மது அருந்தினார். அதன்பிறகு என்னிடம் தவறாக நடக்க முயன்றார். நான் அதிர்ச்சியானேன். அவரை அன்று வலுகட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினேன். தற்போது தொடர்ந்து பாலியல் மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார். போலீசார் சுனில் லோதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.