வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் | குற்றத்தை நிரூபித்தால் கணவரை பிரிய தயார்: அடுக்கடுக்கான கேள்விகளுடன் ஜானி மாஸ்டர் மனைவி சவால் | மொழி இல்லம் : புது வீடு கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் மிருணாளினி ரவி | நான் ரொம்ப சின்ன பொண்ணுங்க : பவி டீச்சர் பிரிகிடா விளக்கம் | எல்.சி.யு.வில் இணையும் ராகவா லாரன்ஸ் |
மராட்டிய மாநிலம் பீமா கொரோகானில் 2018ம் ஆண்டு நடந்த பேரணில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாகா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சமீபத்தில் கவுதம் நவ்காலாவை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த விடுதலை உத்தரவை பலரும் விமர்சித்தனர். காஷ்மீர் பைல்ஸ் படம் மூலம் பிரபலமான டைரக்டர் விவேக் அக்னிஹோத்ரியும் நீதிபதி தீர்ப்பை விமர்சித்து கருத்து பதிவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சிலர் மீது டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் வீடியோ கான்பரஸ் மூலம் விவேக் அக்னிஹோத்ரி ஆஜராகி மன்னிப்பு கேட்டார். அதை ஏற்காத நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதிக்கு எதிராக வெளியிட்ட பதிவுக்காக மன்னிப்பு கேட்டார். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.