'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
மராட்டிய மாநிலம் பீமா கொரோகானில் 2018ம் ஆண்டு நடந்த பேரணில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று சமூக ஆர்வலர் கவுதம் நவ்லாகா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சமீபத்தில் கவுதம் நவ்காலாவை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் இந்த விடுதலை உத்தரவை பலரும் விமர்சித்தனர். காஷ்மீர் பைல்ஸ் படம் மூலம் பிரபலமான டைரக்டர் விவேக் அக்னிஹோத்ரியும் நீதிபதி தீர்ப்பை விமர்சித்து கருத்து பதிவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட சிலர் மீது டில்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் வீடியோ கான்பரஸ் மூலம் விவேக் அக்னிஹோத்ரி ஆஜராகி மன்னிப்பு கேட்டார். அதை ஏற்காத நீதிபதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதையடுத்து விவேக் அக்னிஹோத்ரி கோர்ட்டில் நேரில் ஆஜராகி நீதிபதிக்கு எதிராக வெளியிட்ட பதிவுக்காக மன்னிப்பு கேட்டார். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்து வைத்தது.