புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும் அங்கு இன்னமும் முன்னணி நடிகைகள் பட்டியலில் அவர் இடம் பெறவில்லை. ஆனாலும், அவரை தெலுங்கு, தமிழில் நடிக்க வைக்க சிலர் தொடர்ந்து முயற்சித்தார்கள். கடைசியாக ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள அவரது 30வது படத்தில் ஜான்வியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
இப்படத்திற்காக ஜான்விக்கு சம்பளமாக 5 கோடி வழங்கப்படுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகைகளின் சம்பளமாக அதிகபட்சமாக 3 கோடி தான் உள்ளது. ஹிந்தியில் இன்னும் முன்னணி நடிகையாக உயராத ஜான்விக்கு 5 கோடி சம்பளம் அதிகம்தான் என்கிறார்கள். அதற்கு உதாரணமாக கியாரா அத்வானிக்கு 'ஆர்சி 15' படத்தில் 4 கோடியை வழங்கியதைச் சொல்கிறார்கள். முன்னணி நடிகையான அவருக்கே 4 கோடி எனும் போது ஜான்விக்கு 5 கோடி அதிகமே என்பதுதான் டோலிவுட் கருத்தாக உள்ளது.
அதே சமயம் 'புராஜக்ட் கே' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனேக்கு 10 கோடிக்கும் அதிகமான சம்பளம் தந்துள்ளார்களாம்.