ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும் அங்கு இன்னமும் முன்னணி நடிகைகள் பட்டியலில் அவர் இடம் பெறவில்லை. ஆனாலும், அவரை தெலுங்கு, தமிழில் நடிக்க வைக்க சிலர் தொடர்ந்து முயற்சித்தார்கள். கடைசியாக ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள அவரது 30வது படத்தில் ஜான்வியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
இப்படத்திற்காக ஜான்விக்கு சம்பளமாக 5 கோடி வழங்கப்படுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகைகளின் சம்பளமாக அதிகபட்சமாக 3 கோடி தான் உள்ளது. ஹிந்தியில் இன்னும் முன்னணி நடிகையாக உயராத ஜான்விக்கு 5 கோடி சம்பளம் அதிகம்தான் என்கிறார்கள். அதற்கு உதாரணமாக கியாரா அத்வானிக்கு 'ஆர்சி 15' படத்தில் 4 கோடியை வழங்கியதைச் சொல்கிறார்கள். முன்னணி நடிகையான அவருக்கே 4 கோடி எனும் போது ஜான்விக்கு 5 கோடி அதிகமே என்பதுதான் டோலிவுட் கருத்தாக உள்ளது.
அதே சமயம் 'புராஜக்ட் கே' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனேக்கு 10 கோடிக்கும் அதிகமான சம்பளம் தந்துள்ளார்களாம்.