இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுவது அனைவருக்கும் தெரியும் காரணம். ஹிந்தியில் தயாராகும் படங்களுக்கு 8 மாநிலங்களில் வியாபாரம் இருக்கிறது. வெளிநாடுகளிலும் இந்தி படங்களுக்கு வரவேற்பு இருக்கும். இதன் காரணமாக நடிகைகள் கோடி கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.
தற்போது பெரும்பாலான இந்தி படங்கள் பான் இந்தியா படமாக தயாராவதால் சம்பளத்தை மேலும் அதிரடியாக உயர்த்தி உள்ளார்கள். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் தீபிகா படுகோன் ஹாலிவுட் படங்களில் நடிக்க 25 கோடியும், பாலிவுட் படங்களில் நடிக்க 10 கோடியும் சம்பளமாக பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த 'பதான்' படம் ஆயிரம் கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் வெற்றிக்கு தீபிகா படுகோனின் கவர்ச்சியும், சண்டைக் காட்சிகளும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் தற்போது தனது சம்பளத்தை 18 கோடியாக உயர்த்தி விட்டார். தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் 'ப்ராஜெக்ட் கே' என்ற படத்தில் நடிக்க தீபிகா 18 கோடி சம்பளம் வாங்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அவர் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர அமிதாப்பச்சன், திஷா பதானி ஆகியோரும் நடிக்கிறார்கள். இது சுமார் 500 கோடி செலவில் தயாராகும் பான் இந்தியா படமாகும்.