டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் பங்களாவை, 'காத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ்' நிறுவனம் கையகப்படுத்துகிறது. இங்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மும்பையில் உள்ள செம்பூரில் அமைந்துள்ள மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ் கபூருக்கு சொந்தமான பங்களாவை, அவரது வாரிசுகளான கபூர் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கி உள்ளதாக காத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரோஜ்ஷா காத்ரேஜ் கூறியதாவது: நிலத்தின் மொத்த அளவு கிட்டத்தட்ட ஒரு ஏக்கர். இந்த நிலத்தில் ஆடம்பர வீட்டுத் திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.