புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான ராஜ் கபூரின் பங்களாவை, 'காத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ்' நிறுவனம் கையகப்படுத்துகிறது. இங்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மும்பையில் உள்ள செம்பூரில் அமைந்துள்ள மறைந்த பழம்பெரும் நடிகர் ராஜ் கபூருக்கு சொந்தமான பங்களாவை, அவரது வாரிசுகளான கபூர் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கி உள்ளதாக காத்ரேஜ் ப்ராப்பர்ட்டீஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரோஜ்ஷா காத்ரேஜ் கூறியதாவது: நிலத்தின் மொத்த அளவு கிட்டத்தட்ட ஒரு ஏக்கர். இந்த நிலத்தில் ஆடம்பர வீட்டுத் திட்டத்தை உருவாக்க முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய்.
இவ்வாறு அவர் கூறினார்.