இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன் மீது அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகள் காரணமாக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கும் நீதிமன்றத்திற்கும் நடையாக நடந்து வருகிறார். இப்படி சோகத்தில் இருந்துவரும் அவரை உற்சாகப்படுத்தும் விதமாக அவர் நடித்துள்ள 'டெல் இட் லைக் எ உமன்' என்கிற படத்தில் இடம் பெற்றுள்ள அப்ளாஸ் என்கிற பாடல் 95 வது ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், “இந்த மகிழ்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே வரவில்லை. ஆஸ்கர் விருதுடன் நாங்களும் இணைந்து இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய பெருமை. 'டெல் இட் லைக் எ உமன்' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.. மேலும் இதே பிரிவில் போட்டிக்கு தேர்வாகியுள்ள நாட்டு நாட்டு பாடலின் வெற்றிக்காக ஆர்ஆர்ஆர் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.