புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சோட், கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்தார். அதன் காரணமாகவே அவரை ரசிகர்கள் கடவுளாக பார்க்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்தி பேட்டை மாவட்டத்தில் ஆதிவாசி கிராமத்தைச் சார்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கோயில் கட்டி அதில் அவருடைய சிலையை வைத்திருக்கிறார்கள். அந்த மக்கள் தனக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து நேற்று தனக்காக கட்டியுள்ள கோவிலை பார்ப்பதற்காக சோனு சூட் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலத்துடன் அழைத்து சென்றார்கள். அங்குள்ள செல்பிதாண்டா என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலுக்குள் சென்று தனது சிலையை பார்த்து நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார் நடிகர் சோனு சூட். அதோடு நான் கடவுள் இல்லை, உங்களை போன்று ஒரு மனிதன் தான். இந்த கிராமத்திற்கு எந்த விதமான உதவிகள் தேவை என்றாலும் செய்து தர நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களது அன்புக்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.