லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். |
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சோட், கொரோனா காலகட்டத்தில் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்தார். அதன் காரணமாகவே அவரை ரசிகர்கள் கடவுளாக பார்க்கத் தொடங்கினார்கள். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்தி பேட்டை மாவட்டத்தில் ஆதிவாசி கிராமத்தைச் சார்ந்த மக்கள் தங்களது கிராமத்தில் நடிகர் சோனு சூட்டிற்கு ஒரு கோயில் கட்டி அதில் அவருடைய சிலையை வைத்திருக்கிறார்கள். அந்த மக்கள் தனக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து நேற்று தனக்காக கட்டியுள்ள கோவிலை பார்ப்பதற்காக சோனு சூட் அந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஊர்வலத்துடன் அழைத்து சென்றார்கள். அங்குள்ள செல்பிதாண்டா என்ற கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அந்த கோவிலுக்குள் சென்று தனது சிலையை பார்த்து நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார் நடிகர் சோனு சூட். அதோடு நான் கடவுள் இல்லை, உங்களை போன்று ஒரு மனிதன் தான். இந்த கிராமத்திற்கு எந்த விதமான உதவிகள் தேவை என்றாலும் செய்து தர நான் கடமைப்பட்டுள்ளேன். உங்களது அன்புக்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.