கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி |
பெங்களூருவைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் இருந்தவாறே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோர் சுகேஷுக்கு உதவியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஏற்கெனவே ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் சுகேஷிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக, டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன் நோரா பதேகிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சுகேஷிடம் பரிசு பொருள், பணம் பெற்றது உண்மைதான். ஆனால் அவர் மோசடி நபர் என்று அப்போது தனக்கு தெரியாது என்று நோரா விசாரணையில் தெரிவித்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.