இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பெங்களூருவைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் இருந்தவாறே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோர் சுகேஷுக்கு உதவியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஏற்கெனவே ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் சுகேஷிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக, டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன் நோரா பதேகிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சுகேஷிடம் பரிசு பொருள், பணம் பெற்றது உண்மைதான். ஆனால் அவர் மோசடி நபர் என்று அப்போது தனக்கு தெரியாது என்று நோரா விசாரணையில் தெரிவித்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.