மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
பெங்களூருவைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குள் இருந்தவாறே தொழில் அதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோர் சுகேஷுக்கு உதவியதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஏற்கெனவே ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் சுகேஷிடம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள் வாங்கிய விவகாரம் தொடர்பாக, டில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த சில நாட்களுக்கு முன் நோரா பதேகிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதையடுத்து அவர் நேற்று நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட ரூ.200 கோடி வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் சுகேஷிடம் பரிசு பொருள், பணம் பெற்றது உண்மைதான். ஆனால் அவர் மோசடி நபர் என்று அப்போது தனக்கு தெரியாது என்று நோரா விசாரணையில் தெரிவித்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.