இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கத்தாரில் தற்போது பிபா கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை நோரா பதேஹி என்பவர் நடனமாடினார். அந்த நடனத்தின்போது தன்னிடம் இருந்த இந்திய தேசியக்கொடியை இரண்டு கைகளிலும் பிடித்து பறக்கவிட்டபடி உற்சாகமாக ஜெய்ஹிந்த் என்றும் கத்தினார். இவரது இந்த செயலுக்கு பலரிடமிருந்து வரவேற்பு கிடைத்தாலும் இந்த நிகழ்வில் அவர் எதிர்பாராமல் செய்த ஒரு விஷயம் தற்போது அவருக்கு எதிராக திரும்பி சர்ச்சையை கிளப்பிவிட்டது.
அதாவது இந்த நடனத்தின் போது அவர் நமது தேசியக்கொடியை தலைகீழாக காட்டினார். அதுமட்டுமல்ல அவர் அந்த தேசிய கொடியை வாங்கியபோது கீழே இருந் ஒருவர் அதை தூக்கிப்போட நோரா பதேஹி அதை பிடிப்பதற்குள் கீழே விழுந்தது. இவற்றை குறிப்பிட்டு பலரும் நோரா பதேஹி, நமது தேசியக்கொடியை அவமதித்து விட்டார் என கூறி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அதேசமயம் அந்த கொடியை அவர் முதலில் நேராக பிடித்திருந்ததும் கொடியை சுழற்றியபோது அவரை அறியாமலேயே அது தலைகீழாக மாறியதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. இதை பதிவிட்டுள்ள சிலர் நோரா பதேஹிக்கு உள்ள தேசிய உணர்வை மட்டுமே நாம் கருத்தில் கொண்டு அவரை பாராட்ட வேண்டுமே தவிர, அந்த விழா மேடையில் ஏதோ ஒரு பதட்டத்தில் அவர் தன்னையறியாமல் தவறுதலாக செய்த ஒரு விஷயத்தை பூதாகரப்படுத்தி அவரை அவமதிக்க கூடாது என்று ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.