ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பெடியா என்கிற திரைப்படம் நாளை (நவ-25) வெளியாக உள்ளது. தமிழிலும் இந்த படம் ஓநாய் என்கிற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் வருண் தவான். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, சானியா மிர்சா குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறினார்.
“சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக, முதன்முதலாக ஒரு விளம்பர படத்தில் நடித்தபோது முதல் சம்பளமாக 5000 ரூபாய் கிடைத்தது. அந்த சமயத்தில் சானியா மிர்சாவுடன் நட்பாக பழகி வந்தேன். அப்போது எனக்கு போன் செய்த சானியா, ஆப்பிள் வாங்கி வருமாறு கூறினார். நானும் ஆப்பிளை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்கு சென்றபோது, கதவைத் திறந்த அவரது அம்மா என் மகள் ஆப்பிள் சாப்பிட மாட்டாளே, யாருக்காக வாங்கி வந்தாய் என்று சத்தம் போட்டார். அப்போது பின்னாலிருந்து வந்த சானியா மிர்சா நான் தான் வாங்கி வரச்சொன்னேன் என கூறிய பின்னரே அவரது அம்மா சமாதானம் அடைந்தார்” என்று கூறினார் வருண் தவான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரருமான சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில், சானியாவுக்கும் தனக்குமான நட்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் வருண் தவான்.