இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பெடியா என்கிற திரைப்படம் நாளை (நவ-25) வெளியாக உள்ளது. தமிழிலும் இந்த படம் ஓநாய் என்கிற பெயரில் வெளியாகிறது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார் வருண் தவான். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, சானியா மிர்சா குறித்து ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை கூறினார்.
“சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக, முதன்முதலாக ஒரு விளம்பர படத்தில் நடித்தபோது முதல் சம்பளமாக 5000 ரூபாய் கிடைத்தது. அந்த சமயத்தில் சானியா மிர்சாவுடன் நட்பாக பழகி வந்தேன். அப்போது எனக்கு போன் செய்த சானியா, ஆப்பிள் வாங்கி வருமாறு கூறினார். நானும் ஆப்பிளை வாங்கி கொண்டு அவரது வீட்டிற்கு சென்றபோது, கதவைத் திறந்த அவரது அம்மா என் மகள் ஆப்பிள் சாப்பிட மாட்டாளே, யாருக்காக வாங்கி வந்தாய் என்று சத்தம் போட்டார். அப்போது பின்னாலிருந்து வந்த சானியா மிர்சா நான் தான் வாங்கி வரச்சொன்னேன் என கூறிய பின்னரே அவரது அம்மா சமாதானம் அடைந்தார்” என்று கூறினார் வருண் தவான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா தனது கணவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரருமான சோயப் மாலிக்கை விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக பரபரப்பான செய்திகள் வெளியான நிலையில், சானியாவுக்கும் தனக்குமான நட்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது இந்த தகவலை கூறியுள்ளார் வருண் தவான்.