காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிப்பிற்கு சிறிது காலம் ஓய்வு கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். சமீபத்தில் இவரது நடிப்பில் ‛லால் சிங் சத்தா' படம் வெளியாகி தோல்வியை தழுவியது. நான்கு ஆண்டுகளுக்கு பின் அவரது நடிப்பில் வெளிவந்த படம் ஏமாற்றத்தை தந்தது. இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆனதும் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அமீர்கான் அடுத்து ‛சாம்பியன்ஸ்' என்ற படத்தில் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் அந்தபடம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது.
இந்த பட அறிவிப்பை வெளியிட்டு அமீர்கான் கூறுகையில், ‛‛சாம்பியன்ஸ் படத்தில் நான் நடிப்பதாக இருந்தேன். ஆனால் இப்போது விலகிவிட்டேன். எனக்கு பதில் வேறு ஒருவர் நடிப்பார். இந்த படத்தை சோனி நிறுவனத்துடன் இணைந்து சிறந்த முறையில் தயாரிக்க உள்ளேன். நான் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட தற்காலிகமாக சினிமாவில் நடிப்பை விட்டு விலகி ஓய்வெடுக்க எண்ணி உள்ளேன். கடந்த 35 ஆண்டுகளாக சினிமாவிற்காக ஓடினேன். இப்போது எனக்கு நெருக்கமானவர்களுடன் நேரத்தை செலவிட இதுவே சரியான தருணமாக இருக்கும்'' என்றார்.