காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரும், 'ஆர்ஆர்ஆர்' படக் கதாநாயகியுமான ஆலியா பட் பத்து நாட்களுக்கு முன்பு நவம்பர் 6ம் தேதி ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். அவருக்கும், பாலிவுட்டின் முன்னணி நடிகருமான ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் காதல் திருமணம் நடைபெற்றது. ஜுன் மாதத்தில் ஆலியா தாய்மை அடைந்திருப்பதாக ரன்பீர் கபூர் அறிவித்தார்.
திருணமாகி, தாய்மை அடைந்த பின்னும் ஆலியா பட் அவர் நடித்து வெளிவந்த படங்களான 'டார்லிங்ஸ், பிரம்மாஸ்திரா' ஆகிய படங்களின் புரமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடித்த 'பிரம்மாஸ்திரா' படம் பெரிய வெற்றி பெற்றது.
குழந்தை பெற்ற பின் கடந்த பத்து நாட்களாக தனது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்கள் எதையும் பகிராமல் இருந்தார். நேற்று அவருடைய உருவம் சரியாகத் தெரியாத அளவுக்கு 'அவுட் ஆப் போகஸ்' செய்து, கையில் 'மம்மா' என்று எழுதியிருந்த காபி கோப்பைக்கு போகஸ் செய்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். பல பிரபலங்கள் லைக் செய்த, அந்த புகைப்படத்திற்குக் கூட 17 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது.