படம் தோல்வி: பாதி சம்பளத்தை திருப்பிக் கொடுத்த நடிகர் | 250 கோடியில் வீடு கட்டிய பாலிவுட் நட்சத்திர தம்பதிகள் | பிளாஷ்பேக்: மருத்துவமனை படுக்கையில் இருந்து இளையராஜா உருவாக்கிய பாடல் | பிளாஷ்பேக்: 3 கேமராக்களில் படமான முதல் பாடல் | குப்பைக் கிடங்கில் இருந்த நேரம்: 'குபேரா' அனுபவம் பற்றி தனுஷ் | 24 மணி நேர சாதனை : டாப் 5ல் இடம் பிடித்த 'அகாண்டா 2' டீசர் | 'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! |
கடந்த 2012ல் ஸ்ரீதேவி நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்கள் தங்களிடமுள்ள தனித்துவத்தை இழக்க கூடாது என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாக வெளியான இந்த படத்தை கவுரி ஷிண்டே என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நித்யா மேனன் மற்றும் அஜித் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி தற்போது பத்து வருடங்களை தொட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் கவுரி ஷிண்டே குறித்தும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மனம் திறந்துள்ளார்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படப்பிடிப்பில் அம்மா எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை என்னால் நேரில் பார்க்க முடிந்தது. நானும் இதில் கொஞ்ச நேரமே வந்து போகும் விதமாக நடித்து இருந்தேன். பின்னாளில் அம்மா என்னிடம் கூறும்போது என்றாவது ஒரு நாள் நீ கவுரி ஷிண்டேவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும்.. அது என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். கவுரி ஷிண்டேவும் விரைவில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு கவுரி ஷிண்டே எங்களது குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார்” என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.