பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | விஜய் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்: சிவராஜ்குமார் வேண்டுகோள் | 60 கோடி செலுத்த ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவு | நயன்தாரா, கவின் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு |
பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழிலதிபர்களிடமிருந்து 200 கோடி ரூபாய் மோசடி செய்து, பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோருக்கு கார் மற்றும் விலை உயர்ந்த பரிசினை வழங்கியதாக விசாரணையில் கூறியிருந்தார். அதையடுத்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஜாக்குலின். அதையடுத்து இந்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், நடிகை ஜாக்குலின் தனது மொபைலில் இருந்த சாட்சியங்களை அளித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதோடு அவர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டார்.
ஆனால் அவரது பெயர் லுக் அவுட் நோட்டீஸில் இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை என்று அவர் மீது அமலாக்கத்துறை டில்லி உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி உயர்நீதின்றம் உத்தரவிட்டிருக்கிறது.