பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழிலதிபர்களிடமிருந்து 200 கோடி ரூபாய் மோசடி செய்து, பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோருக்கு கார் மற்றும் விலை உயர்ந்த பரிசினை வழங்கியதாக விசாரணையில் கூறியிருந்தார். அதையடுத்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஜாக்குலின். அதையடுத்து இந்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், நடிகை ஜாக்குலின் தனது மொபைலில் இருந்த சாட்சியங்களை அளித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதோடு அவர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டார்.
ஆனால் அவரது பெயர் லுக் அவுட் நோட்டீஸில் இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை என்று அவர் மீது அமலாக்கத்துறை டில்லி உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி உயர்நீதின்றம் உத்தரவிட்டிருக்கிறது.